file 20200511 49558 s7f11n
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவில்லை!!!

Share

இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க கூறியவை வருமாறு,

” எமது நாட்டு வெளிவிவகாரக் கொள்கையானது ஒரு திசையை நோக்கி இழுத்துச்செல்லப்படுகின்றது. இது பயங்கரமான நிலைமை ஏற்பட வழிவகுக்கும்.

அதேபோல நாளொன்றுக்கு லட்சம் ரூபாவை செலவளிப்பவர்களுக்கு, இந்நாட்டில் ஒருவேளை உணவைகூட உண்பதற்கு கஷ்டப்படுபவர்களும் வாழ்கின்றனர் என்பது தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இதுவும் பெரும் பிரச்சினையாகும்.

ஏனெனில் இந்நாட்டில் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை மந்த போசனை பிரச்சினையை எதிர்கொள்கின்றது. அத்துடன், 30 வீதமான மக்களுக்கு மூவேளை உணவை முறையாக உண்ண முடியாத நெருக்கடியான பொருளாதார நிலை உருவாகியுள்ளது. இந்நிலைமை குறித்து நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

எமது ஆட்சிகாலத்தில் இதுவரை நாம் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பில் 2022 இல் மீளாய்வு செய்யப்பட வேண்டும். சுய விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறு சுய விமர்சனம் இல்லையேல் முன்னோக்கி செல்ல முடியாது.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...