school072446
செய்திகள்உலகம்

பாடசாலையில் தீ -26 மாணவர்கள் சாவு!

Share

பாடசாலை ஒன்றில் தீ விபத்து காரணமாக 26 மாணவர்கள் சாவடைந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலுள்ளபாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 மாணவா்கள் சாவடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,

நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமான மாரடியில் அமைந்துள்ள பாடசாலையில் கடந்த திங்கள் கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வைக்கோல் கூரை வேயப்பட்ட 3பாலர் வகுப்புகள் மற்றும் ஆரம்ப வகுப்புகள் தீக்கிரையாகின. இதில், 3 முதல் 8 வயது வரை கொண்ட 26 மாணவா்கள் சாவடைந்துள்ளனர் .

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நைஜா் பாடசாலைகளில் மாணவா்களுக்குப் போதிய இடம் இல்லாததால், தற்காலிகமாக வைக்கோல் கூரைகளைக் கொண்டு வகுப்புகள் அமைக்கப்படுகின்றன.

தலைநகா் நியாமேவின் புகா்ப் பகுதியிலுள்ள ஒரு பாசாலையின் தற்காலிக வகுப்புகளில் கடந்த சித்திரை மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவா்கள் சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...