பாடசாலை ஒன்றில் தீ விபத்து காரணமாக 26 மாணவர்கள் சாவடைந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலுள்ளபாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 மாணவா்கள் சாவடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,
நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமான மாரடியில் அமைந்துள்ள பாடசாலையில் கடந்த திங்கள் கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வைக்கோல் கூரை வேயப்பட்ட 3பாலர் வகுப்புகள் மற்றும் ஆரம்ப வகுப்புகள் தீக்கிரையாகின. இதில், 3 முதல் 8 வயது வரை கொண்ட 26 மாணவா்கள் சாவடைந்துள்ளனர் .
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நைஜா் பாடசாலைகளில் மாணவா்களுக்குப் போதிய இடம் இல்லாததால், தற்காலிகமாக வைக்கோல் கூரைகளைக் கொண்டு வகுப்புகள் அமைக்கப்படுகின்றன.
தலைநகா் நியாமேவின் புகா்ப் பகுதியிலுள்ள ஒரு பாசாலையின் தற்காலிக வகுப்புகளில் கடந்த சித்திரை மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவா்கள் சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment