26 6960c64c2110e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக 2,500 புதிய வீடுகள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி அறிவிப்பு!

Share

இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து, தற்போதும் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்காக 2,500 நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘டித்வா’ சூறாவளியால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்கான நிதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்:

2009-ஆம் ஆண்டு போர் முடிவடைந்த போதிலும், 17 ஆண்டுகள் கடந்தும் மக்கள் இன்னும் தற்காலிக முகாம்களில் வசிப்பது கவலைக்குரியது என அவர் சுட்டிக்காட்டினார்.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு வீடு கட்டுவதற்காக தலா 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே நாடு தழுவிய ரீதியில் 31,000 வீடுகளை அமைக்கத் திட்டமிட்டிருந்தது.

எனினும், அண்மைய சூறாவளிப் பாதிப்பு காரணமாக மேலும் 20,000 – 25,000 புதிய வீடுகளை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மலையக மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இலங்கை அரசாங்கமும் இணைந்து விசேட திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்குக் கௌரவமான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதே இந்த அரசின் முதன்மை இலக்கு என ஜனாதிபதி தனது உரையில் வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...