whatsapp 2
செய்திகள்உலகம்தொழில்நுட்பம்

தனியுரிமை மீறல்! – ‘வட்ஸ் அப்’க்கு 225 மில். யூரோ தண்டம்!

Share

தனியுரிமை மீறல்! – ‘வட்ஸ் அப்’க்கு 225 மில். யூரோ தண்டம்!

.தனியுரிமை விதிகளை மீறியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ‘வட்ஸ் அப்’ நிறுவனத்துக்கு அயர்லாந்து, 225 மில்லியன் யூரோ தண்டம் விதித்துள்ளது.

இது இலங்கை மதிப்பில் சுமார் 4,500 கோடி ரூபா அபராதமாகும்,

தகவல் பரிமாற்ற செயலிகளில் முன்னணியில் இருக்கும் ‘வட்ஸ் அப்’ நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது.

இந்நிலையில், ‘வட்ஸ் அப்’ செயலி தனது பயனர்களின் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்தின் பிற செயலிகளுடன் பகிர்ந்துகொள்கிறது என குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு ‘வட்ஸ் அப்’ நிறுவனத்துக்கு 50 மில்லியன் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.

எனினும் இந்த அபராதம் மிகவும் குறைவாக உள்ளது என ஐரோப்பிய ஒழுங்குமுறையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அயர்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையம் (டி.பி.சி) இந்த அபராதத் தொகையை அதிகரித்துள்ளது.

பல காரணிகளின் அடிப்படையில் அதன் முன்மொழியப்பட்ட அபராதத்தை மறுபரிசீலனை செய்ய மற்றும் அதிகரிக்கும்படி அயர்லாந்திடம் கேட்கப்பட்டது எனவும், அதன் அடிப்படையில் 225 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் டி.பி.சி. தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த அபராதத் தொகை மிகவும் அதிகமானது என்றும், இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் ‘வட்ஸ் அப்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...