நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டவுள்ள 21 ஆவது திருத்தச்சட்டத்தை இறுதிப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது.
இன்று அலரிமாளிகைக்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ, சுமந்திரன், இது சம்பந்தமாக பிரதமருக்கு ஆலோசனை வழங்கினார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அமைச்சரவையில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் அடுத்தக்கட்ட பணிகள் இடம்பெறும்.
#SriLankaNews

