tamilnaadi 101 scaled
இந்தியாசெய்திகள்

2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

Share

2000 கோடி போதைப்பொருள் கடத்தல்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு டெல்லியில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுப் படையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அதேபோன்ற மற்றொரு சம்பவம் நடைபெற இருப்பதாக தெரிய வந்ததால், அதிரடி சோதனை நடத்தப்பட்டபோது பசாய் தாராப்பூர் பகுதியில், கிடங்கு ஒன்றில் சந்தேகத்திற்குரிய கும்பலை அதிகாரிகள் விசாரித்தனர்.

அவர்கள் போதைப்பொருளை சத்துமாவில் கலந்து கடத்த முயன்றுள்ளனர். உடனே அவர்களை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 50 கிலோ ரசாயன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு அதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், ஜாபர் சாதிக் திரையுலக பிரமுகர்கள், பிரபல நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...