8 12 scaled
இந்தியாசெய்திகள்

காதலியை உயிருடன் எரித்து கொன்ற நபர்! திடுக்கிடும் சம்பவம்

Share

காதலியை உயிருடன் எரித்து கொன்ற நபர்! திடுக்கிடும் சம்பவம்

தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண், திடீரென காதலுடன் உறவை முறித்துக் கொண்டதால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் விசாலாட்சி (38). இவர் தனது கணவர் முருகனுடன் வசித்து வந்துள்ளார்.

ஆனால் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஏ.முருகன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் விசாலாட்சி இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி ஏ.முருகனை சந்திக்க விசாலாட்சி சென்றுள்ளார். அங்கு இருவரும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஏ.முருகன் திடீரென விசாலாட்சி கையில் வைத்திருந்த மண்ணெண்யை பறித்து அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

தீப்பற்றியதால் வலியால் அலறித் துடித்த விசாலாட்சியை பொதுமக்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். உடனடியாக அவர் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக விசாலாட்சி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் மூன்று ஆண்டுகால பழக்கத்தை திடீரென முறித்துக் கொண்டதால் ஏ.முருகன் அவரை கொலை செய்துள்ளதாக தெரிய வந்தது.

விசாலாட்சி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏ.முருகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...