23 64eb04cadeedf
உலகம்செய்திகள்

திருட வந்த வீட்டில் டீ போட்டுக் குடித்து கூலாக சென்ற திருடர்கள்!

Share

திருட வந்த வீட்டில் டீ போட்டுக் குடித்து கூலாக சென்ற திருடர்கள்!

தமிழகத்தில், வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள், திருடிய வீட்டில் டீ போட்டுக் குடித்துக் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் அருகே சமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் அசோகன் மற்றும் சித்ரா.

இவர்கள் கடந்த 10 நாள்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் வீட்டின் திருமணத்திற்கு சென்றுள்ளனர் திருமணத்தை முடித்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைந்திருந்தது.

பின்பு, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பொருள்கள் உடைந்து, சிதறி கிடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பீரோவில் இருந்த 17 பவுன் நகை காணாமல் போயுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த தம்பதியினர் திருவண்ணாமலை மாவட்ட தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

டீ போட்டுக் குடித்து சென்ற திருடர்கள்
பின்னர், தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்த போது, வீட்டில் திருட வந்த திருடர்கள் டீ போட்டுக் குடித்துச் சென்றது தெரியவந்தது

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அண்மையில், இந்த பகுதிக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து குத்து விளக்கு, ஸ்பீக்கர் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...