தமிழ் மக்களுக்கு மொழி உணர்ச்சி =இரத்தத்தில் உள்ளது! மு.க ஸ்டாலின் பேச்சு
இந்தியாசெய்திகள்

தமிழ் மக்களுக்கு மொழி உணர்ச்சி =இரத்தத்தில் உள்ளது! மு.க ஸ்டாலின் பேச்சு

Share

தமிழ் மக்களுக்கு மொழி உணர்ச்சி =இரத்தத்தில் உள்ளது! மு.க ஸ்டாலின் பேச்சு

தமிழ் மக்களுக்கு மொழி உணர்வு என்பது எழுத்துகளாக இல்லாமல் அவர்களது இரத்தமாக உள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொன்மை தமிழரின் பெருமை என்ற தலைப்பில் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை சார்பில் பிரம்மாண்டமான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு சிறப்பான உரையை ஆற்றினார்.

அதில், சிந்து சமவெளி நாகரிக மக்கள் பேசிய மொழி தமிழ் தான், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என குறிப்பிட்டு பேசினார்.

அத்துடன் தமிழர்களுக்கு மொழி உணர்வு என்பது எழுத்துகளாக இல்லாமல், அவர்களது உடலில் ஓடும் இரத்தம் போன்றது.

இந்தியாவிலேயே அதிக கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும், இனி இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்து எழுதப்பட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...