23 649c263f1d72b
இந்தியாசெய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு – நீதிபதியிடம் கூறிய பதில்

Share

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் வலியுடன் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

12ம் திகதி வரை நீதிமன்ற காவல்

இன்று நிறைவடையவுள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் திகதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வலியுடன் இருக்கிறேன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி எப்படி இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் வலியுடன் இருப்பதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...