இந்தியாசெய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு – நீதிபதியிடம் கூறிய பதில்

23 649c263f1d72b
Share

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் வலியுடன் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

12ம் திகதி வரை நீதிமன்ற காவல்

இன்று நிறைவடையவுள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் திகதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வலியுடன் இருக்கிறேன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி எப்படி இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் வலியுடன் இருப்பதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...