செல்வம் அடைக்கலநாதன்
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டாவுடனான 25ஆம் திகதி சந்திப்பில் பங்கேற்குமா ரெலோ?

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் இன்று நடைபெற இருந்த பேச்சு கடைசி நேரத்தில் ஜனாதிபதி செயலகத்தால் எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ள நிலையில், அந்தச் சந்திப்பில் பங்கேற்பதா? இல்லையா? என்று கூட்டமைப்பின் பங்காளியான ரெலோ இன்னமும் முடிவு எடுக்கவில்லை.

ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்பட்டிருப்பதால், ஏற்கனவே பேச்சில் கலந்துகொள்வதில்லை என்ற தமது கட்சி எடுத்த முடிவை எதிர்வரும் 19ஆம் திகதி மீளாய்வு செய்வோம் என்று ரெலோ தரப்பினர் தெரிவித்தனர் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது :-

“2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பின்னர் பிற்போடப்பட்ட ஜனாதிபதியுடனான கூட்டம் இன்று நடைபெற இருந்தது.

இந்தச் சந்திப்புக்கான திகதி எமக்கு அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மூவருடனும் பேசிய பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல.

ஜனாதிபதியுடன் பேசுவதற்கான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று காலை 10 மணியளவில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினோம்.

இதிலே தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரமும் கலந்துகொண்டனர்.

இன்று ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தால் தாம் அதில் கலந்துகொண்டிருக்கமாட்டோம் என்றும், ஆனால் இக்கூட்டம் பிற்போடப்பட்டிருப்பதால் எதிர்வரும் 19ஆம் திகதி தங்கள் கட்சி இந்த முடிவை மீளாய்வு செய்யும் எனவும் எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைச் சந்தித்து தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கலாக இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் பல தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....