WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

“அமைச்சு பதவியிலிருந்து நீக்குவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை! – தயாசிறி

Share

” அமைச்சு பதவியிலிருந்து நபர்களை நீக்குவதால் நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. விமல், கம்மன்பில ஆகியோருக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.” – என்று இராஜாங்க அமைச்சரும், சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களுக்கான விசேட கூட்டமொன்று இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.

” அமைச்சர்களை மாற்றுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவர் என்னையும் நீக்கலாம். அந்த அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்தமுடியாது. எனினும், விமல், கம்மன்பிலவை நீக்கியதால் நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? இல்லை.

நாம் அவர்களுக்காக குரல் கொடுப்போம். 11 பங்காளிக்கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயற்படும்.” – என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...