IMG 20220302 WA0001
செய்திகள்அரசியல்இலங்கை

ரஞ்சன் விவகாரம்! – சர்வதேச நாடாளுமன்றை நாடுகிறது எதிரணி

Share

ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளனர்.

ஜெனிவாவில் வைத்து இருவரும் வெளியிட்டுள்ள காணொளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அவரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஜெனிவா வந்துள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.

அத்துடன், சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும். மேற்படி அமைப்புகளுடன் இலங்கைக்கு உடன்படிக்கைகள் உள்ளன. எனவே, அதன்பிரகாரம் செயற்பட வேண்டிவரும். ரஞ்சனுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு.” – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...