dilum amunugama
செய்திகள்இலங்கை

தனியார் பஸ்களுக்கு இ.போ.ச ஊடாக எரிபொருள்!

Share

“பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு, இலங்கை போக்குவரத்து சபை ஊடாக எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், அனுமதி பத்திரமுள்ள தனியார் பஸ்களுக்கு எந்தெந்த இபோச நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரம் உரிய வகையில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைக்கப்பெற்ற கையோடு, அதனை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அதேவேளை, தமக்கு எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...