dilum amunugama
செய்திகள்இலங்கை

தனியார் பஸ்களுக்கு இ.போ.ச ஊடாக எரிபொருள்!

Share

“பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு, இலங்கை போக்குவரத்து சபை ஊடாக எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், அனுமதி பத்திரமுள்ள தனியார் பஸ்களுக்கு எந்தெந்த இபோச நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரம் உரிய வகையில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைக்கப்பெற்ற கையோடு, அதனை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அதேவேளை, தமக்கு எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...