தென்கொரியாவில் நடைபெறவுள்ள உலக சமாதான மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு தென்கொரியா செல்லவுள்ளார்.
இந்த உச்சி மாநாடு நாளை (11) தென்கொரியாவில் ஆரம்பமாகவுள்ளதுடன், முக்கிய உரையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான்கீ மூனின் அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார். இச் சமாதான உச்சிமாநாட்டில் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
Leave a comment