Pushpika de Silva
செய்திகள்இலங்கை

உலக அழகி போட்டியில் அநீதி! – இலங்கை பெண் புஷ்பிகா டி சில்வா

Share

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அதில் கலந்து கொண்ட போட்டியாளர் புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.

அப் போட்டியில் அநீதிகள் இழைக்கப்பாடமல் இருந்திருந்தால் நானே திருமதி அழகுராணி மகுடத்தை வென்றிருப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தனது சமூக வலைத்தளக் கணக்கிலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மனிதர்களாகிய நம்மை அனைவருக்கும் மேலாக கடவுளும் இயற்கையும் சோதிக்கும் நேரம் இது. கொரோனா வைரஸ் போன்றவற்றின் மூலம் அமைதி, தியாகம், ஒருவருக்கு ஒருவர் உதவுதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க வேண்டும் என்பதை மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய தருணம் இது.

சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த திருமதி உலக திருமண அழகி போட்டியில் கலந்து கொண்டேன். அங்கு நான் இறுதிச் சுற்று வரை வெற்றிகரமாகப் போட்டியிட்டேன். எனினும் சில தரப்பிலிருந்து அநீதி இழைக்கப்பட்டது. வழக்கம் போல் எனக்கு கிடைக்க வேண்டிய அவ் வெற்றியை இழக்க செய்தவரை கடவுள் மன்னிக்கவும்.

ஆனால் கடவுளின் முடிவை மாற்ற முயன்ற ஒரு மனிதனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என அவர் பதிவிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...