transparency international logo
செய்திகள்இலங்கை

ஊழல் அதிகரிக்கும் நாடாக இலங்கை !! – ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்

Share

சுத்தமான நிதியளிப்பு தொடர்பான முன்னணி சர்வதேச அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள சமீபத்திய ஊழல் புலனாய்வு சுட்டெண்ணின் படி, இலங்கை ஊழல் நிறைந்த நாடுகளில் மேலும் எட்டு இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட சுட்டெண்ணின் படி, இலங்கை 2021 ஆம் ஆண்டில் ஊழல் மிகுந்த நாடுகளில் 102 ஆவது இடத்திலும், 2020 இல் 94 ஆவது இடத்திலும் இருந்தது.

இம்முறை குறியீட்டை கணக்கிட 180 நாடுகளின் தரவு பயன்படுத்தப்பட்டது.

இச் சுட்டெண்ணின் படி இலங்கை 37 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

0 இன் மதிப்பு மிகவும் மாசுபட்ட நாடு என்றும், 100ற்கும் அருகில் உள்ள மதிப்பு மிகவும் சுத்தமான நாடாகவும் கருதப்படுகிறது.

88ல், டென்மார்க், பின்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகியவை குறியீட்டில் முதலிடத்திலும், சோமாலியா மற்றும் சிரியா 13ஆவது இடத்திலும், தெற்கு சூடான் 11ஆவது இடத்திலும் உள்ளன.

அண்மைக் காலமாக ஊழலைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமையால் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்து வரும் நாடாக மாறியுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான மோசடிகளையும் ஊழலையும் கட்டுப்படுத்தத் தவறினால் இலங்கை அரசாங்கம் விரைவில் ஊழல் நிறைந்த நாடுகளை நோக்கி நகரும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...