748760
செய்திகள்உலகம்

வரட்சியில் கென்யா: மனதை கலங்க வைக்கும் புகைப்படம்!!

Share

சமூக வலைதளங்களில் 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்துகிடக்கும்  புகைப்படமொன்று மனதை பதைக்க வைக்கும் வகையில் பரவலாக பகிரப்படுகின்றது.

குறித்த புகைப்படம் கென்யாவில் நிலவும் வறட்சியால் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள துயரை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

உணவு, தண்ணீரின்றி தவித்த ஒட்டகச்சிவிங்கிகள், அருகிலுள்ள ஏறக்குறைய வறண்ட நிலையில் இருந்த ஒரு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க முயன்றபோது சேற்றில் சிக்கி இறந்த பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நீர்த்தேக்க தண்ணீர் மாசுபடுவதை தடுக்க இவற்றின் உடல்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கென்யாவின் பெரும்பாலான இடங்களில் கடந்த செப்டம்பரில் இருந்து வழக்கமான மழைப்பொழிவில் 30 சதவீதத்துக்கு குறைவாகவே பெய்துள்ளது.

இதனால் இப்பிராந்தியத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கால்நடை மேய்ப்பவர்களும் தங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமின்றி தவிக்கும் நிலை உள்ளது.

#WorldNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....