11 1468233262 jacqueline fernandez5 600
செய்திகள்இந்தியாஇலங்கைசினிமா

இலங்கை நடிகை நாட்டை விட்டு வெளியேற தடை!!!

Share

இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்தியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக  டெல்லி பொருளாதார குற்றவியல் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் சுகேஷ் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 7000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், சுகேஷ் தனது காதலி ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு கொடுத்த ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுகளில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையும் அடங்கும் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதையடுத்து ஜாக்குலின் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.

இந்நிலையில், நடிகை ஜாக்குலின் துபாய் செல்வதற்காக நேற்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். துபாயில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டார்.

ஆனால், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அவரை மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

சிறிது நேர விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44036824 9
பொழுதுபோக்குசினிமா

“டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கப் பயந்தேன்”: நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்...

124750333
பொழுதுபோக்குசினிமா

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரமின் ‘பைசன்’ திரைப்படம்: 6 நாட்களில் ரூ. 40 கோடி வசூல் சாதனை!

‘பரியேறும் பெருமாள்’, ‘மாமன்னன்’, ‘கர்ணன்’ போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் மாரி...

images 2 2
செய்திகள்இலங்கை

போலி பிரேசிலிய கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த செனகல் பிரஜை: மீண்டும் தோஹாவிற்கு நாடு கடத்தல்!

போலியான பிரேசிலியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று...

check afp sri lanka politician shot dead inside office 68f9b44b44c76 600
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்குக் காரணமான சந்தேகநபர்கள் குறித்துத் தகவல் கிடைத்திருப்பதாக...