green the soil 2020 06 09
செய்திகள்இலங்கை

இந்திய உர இறக்குமதி தாமதம் – விவசாய அமைச்சு

Share

நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியில் முகவரின் செயற்பாட்டால் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இவ் உரத்தை நாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியிட்ட விவசாய அமைச்சு,

குறித்த முகவரின் செயற்பாடுகள் ஒப்பந்தத்துக்கு முரணாக காணப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சின் உரச் செயலாளர் அலுவலகம் மற்றும் அரச உர நிறுவனம் ஆகியவை நேரடியாக தலையிட்டு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார இறுதிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியின் போது கடன் பத்திரத்திற்கான கொடுப்பனவு செலுத்தப்படாமை போன்ற காரணங்களினாலேயே உள்நாட்டு முகவர்களின் செயற்பாடுகள் சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...