green the soil 2020 06 09
செய்திகள்இலங்கை

இந்திய உர இறக்குமதி தாமதம் – விவசாய அமைச்சு

Share

நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியில் முகவரின் செயற்பாட்டால் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இவ் உரத்தை நாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியிட்ட விவசாய அமைச்சு,

குறித்த முகவரின் செயற்பாடுகள் ஒப்பந்தத்துக்கு முரணாக காணப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சின் உரச் செயலாளர் அலுவலகம் மற்றும் அரச உர நிறுவனம் ஆகியவை நேரடியாக தலையிட்டு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார இறுதிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியின் போது கடன் பத்திரத்திற்கான கொடுப்பனவு செலுத்தப்படாமை போன்ற காரணங்களினாலேயே உள்நாட்டு முகவர்களின் செயற்பாடுகள் சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...