Dylan Pereira
செய்திகள்அரசியல்இலங்கை

கம்பி மீது சைக்கிளில் பயணிப்பது போன்ற காலத்திலும் திருப்தியான பாதீடு!

Share

கம்பியில் சைக்கிள் சவாரி செய்வதுபோல, இக்கட்டான சூழ்நிலையாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதீட்டை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்.”- என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புகழாரம் சூட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீட்டு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு புகழாரம் சூட்டினாரம்.

” கொரோனா பெருந்தொற்றால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லா துறைகளும் ஸ்தம்பித்துள்ளன. இந்நிலையில் இருந்து மீள்வதென்பது சவாலுக்குரிய விடயமாகும்.

இக்காலப்பகுதியில் பயணிப்பதென்பது கம்பி மீது சைக்கிள் சவாரி செய்வதுபோன்றதாகும்.

நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களுக்கு பாரிய சுமைகளை திணிக்காத, இருப்பவர்களிடமிருந்து வரிகளை அறவிடும் பாதீட்டை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.

2022 ஆம் ஆண்டிலாவது அரசியல், கட்சி, இனம், மத பேதங்களை மறந்து இலங்கையர்களாக செயற்படுவோம். அப்போதுதான் முன்னோக்கி பயணிக்கக்கூடியதாக இருக்கும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...