IMG 20211121 WA0075
செய்திகள்இலங்கைபிராந்தியம்

‘கொல்பவன் வெல்வான்’ – வேலணையில் கிளைமோர் மீட்பு

Share

புதைக்கப்பட்ட நிலையில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது.

குறித்த கிளைமோர் குண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தள சிறப்புப் பிரிவினரினால் இந்த குண்டு மீட்கப்பட்ட நிலையில் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ‘கொல்பவன் வெல்வான்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது என இராணுவம் தெரிவித்துள்ளது.

IMG 20211121 WA0069 IMG 20211121 WA0076

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 11
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க இணக்கம்: காணி உரிமையாளர்கள் தகவல்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்திருக்கும் நிலப்பரப்பு தவிர்ந்த, அதனைச் சூழவுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகளைக் கட்டம்...

14 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பலந்தோட்டையில் கொடூரம்: பொலிஸார் மீது காரை மோதித் தள்ளிய கும்பல் – கான்ஸ்டபிள் பலி!

அம்பலந்தோட்டையில் இன்று அதிகாலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது கார் ஒன்று மோதியதில்...

25 691805cfda215
இலங்கைஉலகம்

உலகை அச்சுறுத்தும் பாபா வாங்காவின் 2026 கணிப்புகள்: 3-ம் உலகப்போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி!

எதிர்காலத்தைக் கணிப்பதில் உலகப் புகழ்பெற்றவரான பாபா வங்கா (Baba Vanga), 2026 ஆம் ஆண்டு மனிதகுலத்திற்குப்...

MediaFile 4 5
செய்திகள்அரசியல்இலங்கை

மத்துகம பிரதேச சபை தவிசாளர் சரணடைவு: நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது!

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க,...