IMG 20211121 WA0075
செய்திகள்இலங்கைபிராந்தியம்

‘கொல்பவன் வெல்வான்’ – வேலணையில் கிளைமோர் மீட்பு

Share

புதைக்கப்பட்ட நிலையில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது.

குறித்த கிளைமோர் குண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தள சிறப்புப் பிரிவினரினால் இந்த குண்டு மீட்கப்பட்ட நிலையில் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ‘கொல்பவன் வெல்வான்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது என இராணுவம் தெரிவித்துள்ளது.

IMG 20211121 WA0069 IMG 20211121 WA0076

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
b9d8b9a9ab0ea7958d1545b4b61a17b5 1
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிலைமை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரிப்பு – 203 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள சீரற்ற வானிலை அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 639...

ban2 1762774731
உலகம்செய்திகள்

சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடு அவுஸ்திரேலியா: 16 வயதிற்குட்பட்டோர் கணக்குகள் நீக்க உத்தரவு!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா...

images 5 3
இலங்கைசெய்திகள்

அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீள ஆரம்பம்: 9929 பாடசாலைகள் டிசம்பர் 16 இல் திறப்பு!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு...

images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...