diwali 679 1571638039 1605507165 1606472776
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மக்களிடையே ஏற்பட்ட பதற்றநிலை!

Share

கார்த்திகை தீபத்திருநாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் தீபமேற்றி தீபத்திருநாளை கொண்டாடிய வேளையில், அங்கு  வந்த இராணுவத்தினரால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பல பாகங்களிலும் நேற்றைய தினம் இந்துக்களால் கார்த்திகை தீப விளக்கீடுகள் கொண்டாடப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் மக்கள் கடைகளிலும், வீடுகளிலும் விளக்குகளை  ஏற்றி கொண்டாடினர்.

இதனை அறிந்து அங்கு வந்த இராணுவத்தினராலும்  , இராணுவ புலனாய்வாளர்களாலும் மக்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

IMG 9579

இராணுவத்தினர் தீபம் ஏற்றப்பட்ட வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன்,  அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துக்கொண்டதாக முல்லைதீவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் கலாசார பண்பாட்டுடன் கூடிய பண்டிகைகளை கூட கொண்டாட முடியாத சூழலில் தமிழர் வாழ்ந்துக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அச்சத்துடனேயே நாட்டில் வாழ வேண்டியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நினைவேந்தலை முன்னிட்டு கடந்த 17 (புதன்கிழமை) அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பொலிஸ் பிரிவுகளினூடாக 47 பேருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நினைவேந்தலுக்கு  தடையுத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...