20211118 130632 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடல்வழி பயண சுற்றுலா சேவை – யாழில் ஆரம்பம்

Share

சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இதுவரை காலமும் இல்லாத கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

எட்டுப் பேர் தங்கக்கூடிய நான்கு அறைகளைக் கொண்ட பாய்க்கப்பல் வடிவிலான இயந்திர ரக கப்பலில்
ஒருநாள் மற்றும் சில நாட்கள் கடலில் பயணிக்கக்கூடிய வகையில் இந்த சேவை பரீட்சார்த்தமாக டிசெம்பர் மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காரைநகரில் இருந்து இதனை இந்த மாதத்தில் ஆரம்பிக்க இருந்தோம். ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை பரீட்சார்த்தமாக
ஆரம்பிக்கவுள்ளோம்.

இதன் மூலம் அந்நியச் செலாவணி அதிகரித்து நாட்டிற்கு வருமானம் ஈட்டப்படுவதுடன் உள்ளூர்வாசிகளும் பயன்பெறுவர் – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6933e6366e508
உலகம்செய்திகள்

கனடாவில் கார் விபத்து: யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோரமான கார் விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர்...

25 69342677b4982
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 10 இலட்சம் அபராதம்!

பலாங்கொடை – பெலிஹுல்ஓயா பகுதியில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குத் தண்ணீர் போத்தலை விற்பனை...

images 3 1
இலங்கைசெய்திகள்

புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தவணை 6 மாதங்கள் இடைநிறுத்தம் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை...

images 4 1
இலங்கைசெய்திகள்

டித்வா புயல் பேரழிவு: சி.டி ஸ்கேன் உட்பட 3 பெரிய மருத்துவமனைகள் சேதம் – 100 சிறிய மருத்துவமனைகள் பாதிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்களால் நாட்டின் மூன்று பெரிய மருத்துவமனைகளும், சுமார் 100...