செய்திகள்
அகதிகளை நாயை விட்டு கடிக்கும் படை வீரர்கள்
அகதிகளை நாயை விட்டுக் கடிக்க வைப்பதும், கற்களை வீசி பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்குவதுமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பெலாரஸ் எல்லைப் பாதுகாப்புப் படை இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளது.
லிதுவேனியா நாட்டின் எல்லையில் உறங்கிக் கொண்டிருந்த அகதிகளை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஈராக்கை விட்டு வெளியேறியவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தஞ்சமடையும் முயற்சியாக லிதுவேனியா, பெலாரஸ் நாடுகள் எல்லையில் முகாமிட்டுள்ளனர்.
கடும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்லீப்பிங் பேங் எனப்படும் பைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை வீரர்கள் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் பல்வேறு தரப்பிலான மக்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login