Harin Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!! – நாட்டு மக்களுக்கு அழைப்பு

Share

அரசுக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசால் விவசாயிகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வதற்கு வழியில்லை. இந்நிலையில் விவசாயிகளின் கழுத்தை பிடித்துகூட சேதன பசளையை பயன்படுத்தி எனக்கு விவசாயம் செய்விக்க முடியும் என ஜனாதிபதி மிரட்டுகிறார். 16 ஆம் திகதி விவசாயிகள் வருவார்கள். முடியுமானால் கழுத்தை பிடித்து காட்டுங்கள்.

இந்த அரசு எல்லா வழிகளிலும் பெயில். நாட்டு மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். எனவே, 16 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...