kopay
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோப்பாய் வன்முறை! – மூவர் கைது

Share

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த கும்பல் வாடகைக்கு அமர்த்திச் சென்ற ஓட்டோ சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது-58) படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் அவர்களது அயலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர்களை பழிவாங்குவேன் என கூறிய குறித்த இளைஞன் வன்முறை கும்பலை வரவழைத்து வன்முறையில் ஈடுபடவைத்தார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் நீர்வேலியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் சென்ற ஓட்டோ சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 9 பேர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://tamilnaadi.com/news/local/2021/10/22/graduation-day-sword-team-attakasam/

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...