jaffna 720x375 1
செய்திகள்இலங்கை

நிகழ்நிலையில் யாழ். பல்கலை பட்டமளிப்பு

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு நிகழ்வின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தலைமையில்
கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழாவை, கொவிட் பரவல் காரணமாக நடாத்துவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி மறுத்திருந்தார்.

பட்டக்கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களின் நன்மைக்காக, பட்டங்களை உறுதிப்படுத்தி, நிகழ்நிலையில் பட்டமளிப்பு விழாவை நடாத்த முடிவு செய்யப்பட்டதற்கு இணங்க, இன்று நிகழ்நிலையில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வில், துறைசார் பீடாதிபதிகளால் பட்டங்களை நிறைவு செய்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன.

கொவிட் பரவல் நிலை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர், சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு வைபம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...