TISL
செய்திகள்இலங்கை

விசாரணைகளை துரிதப்படுத்துக! – ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் வலியுறுத்து

Share

பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகளின் இரகசிய நிதி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக மீண்டும் உலகிற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட வெளிநாடுகளில் ஊழல் எவ்வாறு கடல் கடந்த நிறுவனங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றது மற்றும் இறுதி நன்மை பெறும் உரிமையாளர்களின் பதிவேடுகளை வெளிப்படையாக பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் இவ்விடயங்கள் தெளிவாக வலியுறுத்தும் ஆதாரங்களாக அமைந்துள்ளன.

முன்னாள் நீர்ப்பாசன வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் மற்றும் அவரது கணவர் ஆகியோரின் கடல் கடந்த பாரியளவான சொத்துக்களை இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கேட்டுக்கொள்கிறது.

சட்ட அமுலாக்க அதிகாரசபைகளுக்கும் நீதித்துறைக்கும் எந்தவொரு தலையீடுகளும் இன்றி சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பான நிலுவையிலுள்ள விசாரணைகளை முன்னெடுப்பதும் முடிவுகளை மேற்கொள்ளவதும் இன்றியமையாததாகும்.

பண்டோரா பேப்பர்களில் அடையாளம் காணப்பட்ட சொத்துக்கள் இலங்கையில் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்தி பெறப்பட்டதா என்பதை அறிய ஓர் விரிவான விசாரணையை உள்நாட்டில் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மீண்டும் வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
574922858 1463456808471913 8345646138916257300 n
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா நிவாரணம்: இதுவரை 3 இலட்சம் வீடுகளுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கீடு!

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் ஆரம்பக் கொடுப்பனவு, இதுவரை...

image b726ec86c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டன் – டிக்கோயாவில் அனைத்து கட்டுமானங்களுக்கும் உடனடித் தடை: மீறினால் கடும் நடவடிக்கை!

‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, ஹட்டன்-டிக்கோயா நகர சபை...

25 687ca2a2564c6
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி...

gen z and workplace boundaries ai image
செய்திகள்இந்தியா

‘Gen Z’ பணியாளர்கள் மத்தியில் பரவும் ‘மௌன விலகல்’!

இந்தியாவின் தற்போதைய இளம் பணியாளர்கள் (Gen Z) மத்தியில் ‘மௌன விலகல்’ (Silent Resignation) அல்லது...