New Project 26
செய்திகள்இலங்கை

இலங்கையில் எவ்வேளையிலும் தாக்குதல் நடக்கலாம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியது உண்மை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் யாரிடம் ஐ.எஸ் கொள்கை இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. இஸ்லாமிய இராச்சியம் உருவாக்கும் பயணத்தில் சாதாரண தமிழ் மக்கள் மற்றும் சிங்களவர்களை ஐ.எஸ் கொள்கைக்குள் இணைக்க முடியாது.
முஸ்லிம் மக்களை மாத்திரமே இலகுவாக ஐ.எஸ் கொள்கைக்குள் இணைக்க முடியும். ஆகவே, புலனாய்வுத்துறையைப் பயன்படுத்தி, தாக்குதல்கள் நடத்தப்படலாமா, போதனைகள் முன்னெடுக்கப்படுகின்றவா என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராய்கிறோம்.
அதன்படி,ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என்பதால் அது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...