goat scaled
செய்திகள்இலங்கை

ஆடு துஷ்பிரயோகம் – பிரான்ஸில் இலங்கையர் கைது!

Share

பிரான்சில் விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் ஆடு ஒன்றினை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம்  செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணைகளுக்கு டிசம்பர் 23ம் திகதி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் – டூரிஸ் on Île Honoré de Balzac தீவில் வளர்ப்பு ஆடுகளை குறித்த நபர்  துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே ஆட்டினை குறித்த நபர் மூன்று முறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த நபர் 2018ம் ஆண்டு முதல் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து துஷ்பிரயோகம் செய்துள்ளமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜனவரி 12 முதல் 13ம் திகதி வரையிலும், மார்ச் 21 முதல் 22ம் திகதி வரையிலும், ஜூன் 29 முதல் 30ம் திகதி வரையில் இரவு நேரங்களில் சந்தேகநபர் இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், தியானம் அல்லது யோகசம் செய்வதற்கு குறித்த இடத்திற்கு வருவதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மது போதையில் இருந்தமையினால் ஆட்டினை துஷ்பிரயோகம் செய்தமை நினைவில் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி நீதிமன்றில் இடம்பெறும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...