gas scaled
செய்திகள்இலங்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரியுங்கள்! – அரசிடம் கோரிக்கை

Share

உள்நாட்டுச் சந்தையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 2021 ரூபாவாக விற்பனை செய்ய வேண்டும் என்ற போதிலும் இன்று 1493 ரூபாவுக்கே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 1200 ரூபாவினால் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஒன்றியம் கூறுகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 800 அமெரிக்க டொலர்வரை அதிகரித்திருப்பதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதனை நேரடியாக 12.5 கிலோ கிராம் எரிவாயுடன் மாற்றும் போது 2021 ரூபாயாகும். எப்படியிருப்பினும் இன்று வரையில் 12.5 கிலோ கிராம் சிலின்டர் 1493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கப்பல் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் நேரடி செலவுகளின் தொகை 700 ரூபாயாகும். செலவை மாத்திரம் ஈடுசெய்ய ஒரு எரிவாயு சிலிண்டரை 2,800 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு முழுமையாக இடம்பெறாவிடத்து விலை இடைவித்தியாசத்தை திறைசேரியே பெறுப்பேற்க நேரிடும் என அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 09 மாதங்களாக விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் 10,500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவிக்கின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....