gas scaled
செய்திகள்இலங்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரியுங்கள்! – அரசிடம் கோரிக்கை

Share

உள்நாட்டுச் சந்தையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 2021 ரூபாவாக விற்பனை செய்ய வேண்டும் என்ற போதிலும் இன்று 1493 ரூபாவுக்கே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 1200 ரூபாவினால் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஒன்றியம் கூறுகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 800 அமெரிக்க டொலர்வரை அதிகரித்திருப்பதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதனை நேரடியாக 12.5 கிலோ கிராம் எரிவாயுடன் மாற்றும் போது 2021 ரூபாயாகும். எப்படியிருப்பினும் இன்று வரையில் 12.5 கிலோ கிராம் சிலின்டர் 1493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கப்பல் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் நேரடி செலவுகளின் தொகை 700 ரூபாயாகும். செலவை மாத்திரம் ஈடுசெய்ய ஒரு எரிவாயு சிலிண்டரை 2,800 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு முழுமையாக இடம்பெறாவிடத்து விலை இடைவித்தியாசத்தை திறைசேரியே பெறுப்பேற்க நேரிடும் என அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 09 மாதங்களாக விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் 10,500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவிக்கின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...

FB IMG 1764904684113 large
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரணத்தில் பாரபட்சமா? உள்நாட்டுப் பகுதிகளுக்கு உதவிகள் தாமதம் – மக்கள் வேதனை!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள்...

images 10 1
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இடி மின்னலுடன் கனமழை: வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது!

கொழும்பில் இன்று இரவு திடீரென இடி மின்னலுடன் கூடிய பெருமழை கொட்டிப் பெய்கிறது. சுமார் அரை...

articles2FTC207I0V0Mwrh6Fetrpk
இலங்கைசெய்திகள்

டிட்வா புயல் நிவாரணம்: வயல் நிலங்களில் படிந்த மணலை அகற்ற மகாவலி சபை அனுமதி! 

‘டிட்வா’ சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல்...