gas scaled
செய்திகள்இலங்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரியுங்கள்! – அரசிடம் கோரிக்கை

Share

உள்நாட்டுச் சந்தையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 2021 ரூபாவாக விற்பனை செய்ய வேண்டும் என்ற போதிலும் இன்று 1493 ரூபாவுக்கே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 1200 ரூபாவினால் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஒன்றியம் கூறுகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 800 அமெரிக்க டொலர்வரை அதிகரித்திருப்பதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதனை நேரடியாக 12.5 கிலோ கிராம் எரிவாயுடன் மாற்றும் போது 2021 ரூபாயாகும். எப்படியிருப்பினும் இன்று வரையில் 12.5 கிலோ கிராம் சிலின்டர் 1493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கப்பல் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் நேரடி செலவுகளின் தொகை 700 ரூபாயாகும். செலவை மாத்திரம் ஈடுசெய்ய ஒரு எரிவாயு சிலிண்டரை 2,800 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு முழுமையாக இடம்பெறாவிடத்து விலை இடைவித்தியாசத்தை திறைசேரியே பெறுப்பேற்க நேரிடும் என அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 09 மாதங்களாக விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் 10,500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவிக்கின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...