New Project 6
செய்திகள்இலங்கை

பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படலாம்?

Share
அடுத்த இரு வாரங்களில் கொவிட் -19 தொற்று நோயின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது கொவிட் வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் என்றும், நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 4,000 – 5,000 இருந்த நிலையில், அது தற்போது 1,000 ஆக குறைந்துள்ளதுடன், நாளாந்த இறப்பு எண்ணிக்கையும் 50-60 ஆக குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படின் தற்போதுள்ள வழிகாட்டல்கள் மேலும் கடுமையாக்கப்படலாம். அல்லது மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது தடுப்பூசித் திட்டமானது அமுலில் உள்ள நிலையில், வர்த்தக நாமத்தை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69360fc20e3c2
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கை மீட்பு நடவடிக்கைகளுக்காக CERF நிதியிலிருந்து ஐ.நா. 4.5 மில்லியன் டொலர்களை ஒதுக்கியது!

‘டிட்வா’ புயல் மற்றும் அதனைத் தொடர்ந்த அனர்த்தங்களால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை...

1500x900 44536696 indosiya33
உலகம்செய்திகள்

இந்தோனேசியா: ஜகார்த்தா அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து – 17 பேர் பலி!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள 7 அடுக்குமாடி அலுவலகக் கட்டடம் ஒன்றில் திங்கட்கிழமை (டிசம்பர் 9)...

image 405bd3350f
இலங்கைசெய்திகள்

இளநீர் வெட்டும் கத்தியால் 5 முறை குத்திக் கொலை: கணினிப் பொறியியலாளர் கைது!

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்திக் கொலை செய்த...

image 8b04a559b8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மன்னார் மாவட்ட பறங்கி ஆறு, பாலி ஆறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!

வடகிழக்குப் பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால், பேராறு குளத்தின் பாதுகாப்பு...