மருதனார் மட வாள்வெட்டு- கைதானவர்களுக்கு விளக்கமறியல்

1629371978 1618491646 court 2

யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தியில் கடந்த 1 ஆம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகிய ஐவரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் திகதி மருதனார் மட சந்தியில் பழக்கடை நடாத்தும் 04 பிள்ளைகளின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் நேற்று (26) நீதிமன்றில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பநிலையில் எதிர்வரும் 06 திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ள வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை இலங்கையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு சென்ற சிலர் வழிநடத்துவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Exit mobile version