178818 vaccine 1
செய்திகள்இலங்கை

தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது!

Share

தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது!

நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதற்கமைய, 1 கோடியே 40 லட்சத்து 6 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 1 கோடியே 33 லட்சத்து 71 ஆயிரத்து 290 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 70 லட்சத்து 260 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. இதேவேளை சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 11 லட்சத்து 9 ஆயிரத்து 346 பேருக்கு போடப்பட்டுள்ளது,

இதேவேளை, இதுவரை 8 லட்சத்து 91 ஆயிரத்து 734 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 15 லட்சத்து 9 ஆயிரத்து 89 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும் 43 ஆயிரத்து 450 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதுவரை 43 லட்சத்து 6 ஆயிரத்து 41 பேருக்கு ஃபைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 40 ஆயிரத்து 231 பேருக்கு ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது,

அதேபோல், 77 லட்சத்து 2 ஆயிரத்து 955 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 75 லட்சத்து 4 ஆயிரத்து 690 பேருக்கு போடப்பட்டுள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2 ஆயிரத்து 865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சார்ஜென்ட் கைது! – முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன்...

25 68ff21948440b
செய்திகள்இலங்கை

‘எனக்குப் பாதாள உலகத்துடன் தொடர்பில்லை’: காவல்துறை மா அதிபருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை

தனக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியதற்கு...

25 68ff1b2d7e658
விளையாட்டுசெய்திகள்

இந்திய துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் மருத்துவமனையில் அனுமதி: விலா எலும்புக் காயத்தால் உள் இரத்தப்போக்கு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர்...

25 68ff12db23087
செய்திகள்இலங்கை

மதவாச்சியில் வெடிபொருள் மீட்பு: T-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தீவிர விசாரணை

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 25, 2026) சட்டவிரோதமான...