WhatsApp Image 2021 09 05 at 11.28.19 PM
செய்திகள்இலங்கை

முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர்

Share

முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர்

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? இவ்வாறு பொது பலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஞானசார உன்னிடம் எந்தவித தேச பற்றும் கிடையாது. இந்த நாட்டில் உனக்கு பிரச்சினையாக விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? உனக்கு பலம் இருந்தால் பேசு”

இந்த நாட்டில், ஜனாதிபதி,பிரதமர் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய பெரிய கொள்கலன்களில் போதைபொருள்களை நாட்டுக்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு தாராளமாக வழங்குகின்றனர், நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் பறந்து கிடக்கிறது.

பாதுகாக்கப்பட்ட காடுகள் உட்பட அனைத்தையும் வெட்டி அழிக்கிறார்கள், இது சிங்கள தேசம், இந்த சிங்கள தேசத்தில் சாராயக்கடைகள், மதுபானசாலைகள் போன்றவற்றுக்கு பொறுப்பாக
ஜொன்ஸ்டன் போன்ற நபர்கள் உள்ளார்கள்.

என்னை இவர்கள் கொன்றுபோட்டாலும், நான் எவ்வித பயமும் இல்லது சொல்ல வரும் உண்மையை வெளிப்படையாக எடுத்துச் சொல்வேன் – எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஞானசார நீ பெரிய சிங்கம் என நினைத்துக்கொண்டிருக்கிறாய், அவ்வாறு நினைப்பாயானால் நான் உனக்கு சவால் விடுகிறேன், இந்த நாட்டில் மக்கள் உன்ன உணவின்றி இறக்கின்றனர், வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களைப் பற்றி பேசு” எனவும் சவால் விடுத்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...