WhatsApp Image 2021 09 05 at 11.28.19 PM
செய்திகள்இலங்கை

முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர்

Share

முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர்

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? இவ்வாறு பொது பலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஞானசார உன்னிடம் எந்தவித தேச பற்றும் கிடையாது. இந்த நாட்டில் உனக்கு பிரச்சினையாக விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? உனக்கு பலம் இருந்தால் பேசு”

இந்த நாட்டில், ஜனாதிபதி,பிரதமர் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய பெரிய கொள்கலன்களில் போதைபொருள்களை நாட்டுக்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு தாராளமாக வழங்குகின்றனர், நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் பறந்து கிடக்கிறது.

பாதுகாக்கப்பட்ட காடுகள் உட்பட அனைத்தையும் வெட்டி அழிக்கிறார்கள், இது சிங்கள தேசம், இந்த சிங்கள தேசத்தில் சாராயக்கடைகள், மதுபானசாலைகள் போன்றவற்றுக்கு பொறுப்பாக
ஜொன்ஸ்டன் போன்ற நபர்கள் உள்ளார்கள்.

என்னை இவர்கள் கொன்றுபோட்டாலும், நான் எவ்வித பயமும் இல்லது சொல்ல வரும் உண்மையை வெளிப்படையாக எடுத்துச் சொல்வேன் – எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஞானசார நீ பெரிய சிங்கம் என நினைத்துக்கொண்டிருக்கிறாய், அவ்வாறு நினைப்பாயானால் நான் உனக்கு சவால் விடுகிறேன், இந்த நாட்டில் மக்கள் உன்ன உணவின்றி இறக்கின்றனர், வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களைப் பற்றி பேசு” எனவும் சவால் விடுத்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
875262697 1
இலங்கை

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் பணம் பறித்த கும்பல் கைது!

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை...

image 1000x630 13
இலங்கை

குற்றவாளிகளைப் பிடிக்க இன்டர்போல் உதவி: குற்றவாளிகளை நாடு கடத்த நடவடிக்கை

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நேர்மறையான நடவடிக்கைகளை இன்டர்போல்  பாராட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக,...

image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...