WhatsApp Image 2021 09 05 at 11.28.19 PM
செய்திகள்இலங்கை

முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர்

Share

முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர்

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? இவ்வாறு பொது பலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஞானசார உன்னிடம் எந்தவித தேச பற்றும் கிடையாது. இந்த நாட்டில் உனக்கு பிரச்சினையாக விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? உனக்கு பலம் இருந்தால் பேசு”

இந்த நாட்டில், ஜனாதிபதி,பிரதமர் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய பெரிய கொள்கலன்களில் போதைபொருள்களை நாட்டுக்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு தாராளமாக வழங்குகின்றனர், நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் பறந்து கிடக்கிறது.

பாதுகாக்கப்பட்ட காடுகள் உட்பட அனைத்தையும் வெட்டி அழிக்கிறார்கள், இது சிங்கள தேசம், இந்த சிங்கள தேசத்தில் சாராயக்கடைகள், மதுபானசாலைகள் போன்றவற்றுக்கு பொறுப்பாக
ஜொன்ஸ்டன் போன்ற நபர்கள் உள்ளார்கள்.

என்னை இவர்கள் கொன்றுபோட்டாலும், நான் எவ்வித பயமும் இல்லது சொல்ல வரும் உண்மையை வெளிப்படையாக எடுத்துச் சொல்வேன் – எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஞானசார நீ பெரிய சிங்கம் என நினைத்துக்கொண்டிருக்கிறாய், அவ்வாறு நினைப்பாயானால் நான் உனக்கு சவால் விடுகிறேன், இந்த நாட்டில் மக்கள் உன்ன உணவின்றி இறக்கின்றனர், வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களைப் பற்றி பேசு” எனவும் சவால் விடுத்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...