images 5
செய்திகள்இலங்கை

விரைவில் இலங்கைக்குள் எப்சிலன் கொவிட் திரிபு!!-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

Share

விரைவில் இலங்கைக்குள் எப்சிலன் கொவிட் திரிபு!!-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

அதி வீரியம் கொண்டதும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாததுமான “எப்சிலன்” கொவிட் வைரஸ் திரிபு விரைவில் இலங்கைக்கு பரவும் ஆபத்து இருக்கின்றது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நான்காவது கொரோனா அலையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இந்த வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது.

விரைவில் இது இலங்கைக்குள் நுழையும் ஆபத்து இருக்கின்றது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எப்சிலன் வைரஸ் திரிபின் புதிய மூன்று பிறழ்வுகள் உருவாகியுள்ளன என்று வொஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.

இது தற்போதுள்ள தடுப்பூசிகளின் எதிர்ப்பு சக்தியை 70 சதவீதம் வரை பலவீனப்படுத்துகின்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த எப்சிலன் வைரஸ், கலிபோர்னியா வகை எனப்படும் மூன்று பிறழ்வுகைளைக் கொண்டுள்ளது. இது முதன்முதலாக கலிபோர்னியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் பாகிஸ்தானின் லாகூரிலும் அடையாளம் காணப்பட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...