euro
செய்திகள்உலகம்

ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!

Share

ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!

கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.

பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகே மூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பிய வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை அந்த நாடு அறிவித்திருக்கிறது. அந்த ஏழு மூதாளர்களும் முழுமையாகத் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் ஆவர்.

கொலம்பியாவில் தோன்றிய இந்த வைரஸ் முதலில் அமெரிக்காவிலும் ஏனைய சில தென்னமெரிக்க நாடுகளிலும் தொற்றி இருந்தது. தற்சமயம் அது ஐரோப்பாவில் பரவத் தொடங்கியுள்ளது. பிரான்ஸின் வட பிராந்தியமான Hauts-de-France பகுதியில் கொலம்பிய வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பிராந்தியம் ஏற்கனவே டெல்ரா தொற்றுக்களில் முன்னணியில் உள்ளது. பிரான்ஸில் இதுவரை 56 பேருக்குக் கொலம்பியாத் திரிபு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என சுகாதார சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

உலகில் சுமார் 36 நாடுகளில் பரவியுள்ள கொலம்பியா திரிபுக்கு (Colombian variant) உலக சுகாதார நிறுவனம் இன்னமும் முறைப்படி கிரேக்க இலக்க பெயரைச் சூட்டவில்லை. B.1.621 என்னும் அறிவியல் குறியீட்டுப் பெயருடன் உள்ள அந்த வைரஸ் திரிபு தடுப்பூசிகளை எதிர்க்கக் கூடிய வல்லமை கொண்டதாக இருக்க
லாம் என்ற அச்சம் உள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் போர் தற்போது வேறு களங்களுக்கு – அதாவது புதிய திரிபுகளுக்கு எதிரான சண்டையாக – மாறிவிட்டது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி ஏற்றியவர்கள் தொடர்ந்து தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர்.

உலக மக்கள் மத்தியில் புதிய வைரஸ் திரிபுகள் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்ரா பிறழ்வு புதியதொரு தொற்று நோய் போன்று உலகை ஆட்டிப்படைத்து வருகின்றது.

வெவ்வேறு நாடுகளில் அடையாளம் காணப்பட்ட மேலும் புதிய பல திரிபுகள் பலநாடுகளுக்கும் பரவியுள்ளன. டெல்ரா போன்று கொலம்பியா வைரஸ் உலகத் தொற்று நோயாகப் பரவிவிடலாம் என்று அச்சத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...