யாழில் 10,261 குடும்பங்கள் பாதிப்பு!!

rain

சீரற்ற காலநிலை காரணமாக யாழில் 10 ஆயிரத்து 261 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 75 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

இன்று (11) மதியம் 3.30 மணி வரை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு விபரங்களை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டது.

அந்த அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்த நிலையில், 5 தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ள நிலையில் 111 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றுள்ளது.

#SriLankaNews

Exit mobile version