adani scaled
செய்திகள்இந்தியா

நாள் ஒன்றுக்கு 1002 கோடி ரூபாய் வருமானம்! – அசுர வேகம் கண்டுள்ள அதானி குழுமம்

Share

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு அதானி குழுமம் முன்னேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதானி குழுமம் கடந்தாண்டில் நாளொன்றுக்கு 1002 ரூபா கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக IILF நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள IILF நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

அதில் 7.18 லட்சம் கோடி ரூபா சொத்து மதிப்புடன் தொடர்ந்து 10வது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து ஒரு நாளைக்கு 163 கோடி ரூபா உயர்ந்துள்ளது. தற்போது, இவர்களின் குடும்பத்தின் சொத்து மதிப்பு 7 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் மிக வேகமான வளர்ச்சியை பெற்றவர்களில் அதானி நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி இடம் பெற்றுள்ளார்.

இவரும், இவருடைய குடும்பத்தினரும் சார்ந்த தொழில் நிறுவனங்களின் சொத்து மதிப்பு, 2020- 2021ம் ஆண்டில் 5.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் இவர்களின் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 1002 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளது. இதன்மூலம், நாட்டின் 2வது பெரிய பணக்கார குடும்பம் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்து வளர்ச்சியின் மூலம், சீனாவை சேர்ந்த பாட்டில் தண்ணீர் தயாரிப்பாளர் சாங் ஷன்ஷனை பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் 2வது பணக்காரர் என்ற பெருமையையும் அதானி பெற்றுள்ளார்.

2019ம் ஆண்டில் 1.40 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அதானி, 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்துக்கு வந்துள்ளார் என IILF நிறுவனம் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...