1561624914 Sri Lanka Railways declared an Essential Service B
செய்திகள்அரசியல்இலங்கை

ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 1000 கோடி ரூபா நட்டம் !

Share

ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 1000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடத்தில் 1400 கோடி ரூபா செலவு ஏற்பட்டுள்ள நிலையில் 400 கோடி ரூபாவையே திணைக்களம் வருமானமாக பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ரயில் கட்டணத்தை அதிகரித்தால் நட்டத்தை ஓரளவு நிவர்த்திசெய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே திணைக்களமானது இதற்கு முன்னர் வருடமொன்றுக்கு 8 பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக்கொண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக கடந்த வருடத்தில் வருமானம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

பஸ் கட்டணங்கள் அடிக்கடி அதிகரிக்கப்பட்டுவரும் நிலையில் இறுதியாக 2018 ஆம் ஆண்டிலேயே ரயில் கட்டணம் சிறிதளவு அதிகரிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இதுவரை ரயில் கட்டண அதிகரிப்பு எதுவும் இடம்பெறவில்லை. ரயில் சேவையை மக்கள் சேவையாக முன்னெடுத்துச் செல்வதானால் இலாபம் நட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதில் எந்தப் பிரயோசனமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...