1561624914 Sri Lanka Railways declared an Essential Service B
செய்திகள்அரசியல்இலங்கை

ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 1000 கோடி ரூபா நட்டம் !

Share

ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 1000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடத்தில் 1400 கோடி ரூபா செலவு ஏற்பட்டுள்ள நிலையில் 400 கோடி ரூபாவையே திணைக்களம் வருமானமாக பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ரயில் கட்டணத்தை அதிகரித்தால் நட்டத்தை ஓரளவு நிவர்த்திசெய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே திணைக்களமானது இதற்கு முன்னர் வருடமொன்றுக்கு 8 பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக்கொண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக கடந்த வருடத்தில் வருமானம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

பஸ் கட்டணங்கள் அடிக்கடி அதிகரிக்கப்பட்டுவரும் நிலையில் இறுதியாக 2018 ஆம் ஆண்டிலேயே ரயில் கட்டணம் சிறிதளவு அதிகரிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இதுவரை ரயில் கட்டண அதிகரிப்பு எதுவும் இடம்பெறவில்லை. ரயில் சேவையை மக்கள் சேவையாக முன்னெடுத்துச் செல்வதானால் இலாபம் நட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதில் எந்தப் பிரயோசனமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...