Vasan Ratnasingam
செய்திகள்இலங்கை

நாள் ஒன்றில் 10 ஆயிரம் தொற்றாளர்கள்!!!

Share

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் நாள்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் தொற்றாளர்களாக இனங்காணப்படும் அபாயம் உள்ளது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகக்குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார்.

நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா மரண வீதமானது இந்தியாவை விட ஐந்து வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மாதமொன்றுக்கு 10 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படும்.

பெயரளவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கில் 90 சதவீதமான மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தால் மாத்திரமே கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

நாடு தற்போது எச்சரிக்கை நிலை நான்கில் உள்ளது. இது சிவப்பு எச்சரிக்கையையும் சமூக பரவலையும் குறிக்கின்றது. மேலும் தென்னாபிரிக்காவில் பரவும் சி12 எனப்படும் புதிய கொரோனா திரிபும் இலங்கையில் பரவும் அபாயம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...