temple 33 720x375 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு!!

Share

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆலய பூஜைகளில் பங்குபற்றுவதற்கு பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் சுற்றிக்கையின் பிரகாரம், மதத்தலைவர்கள் உட்பட 100 அடியார்களே உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

ஆலய உள்வீதியில் மாத்திரமே பூஜைகள், சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் மற்றும் நேர்த்திக் கடன் நிறைவேற்றுதல் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்னதானம் வழங்கலும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...