விறகு வெட்ட சென்றவர் உயிரிழப்பு!!
விஸ்வமடு றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு இன்று(18) காலை விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஸ்வமடு வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய சமரகோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
விறகு வெட்டிக் கொண்டிருந்தவருக்கு தேனீர் எடுத்துச் சென்ற போதே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்தது. இதனையடுத்து புதுகுடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment