ja.te .ho
செய்திகள்இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை!

Share

யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை!

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனாத் தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது – என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது முக்கியமாகும். மக்கள் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக்கொள்வது சிறந்ததாகும்.

அதேநேரத்தில் எமது வைத்தியசாலையில் இறந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி பெறாதவர்களே. எனவே தடுப்பூசி பெறுவதன் மூலம் இறப்புகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...