ja.te .ho
செய்திகள்இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை!

Share

யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை!

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனாத் தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது – என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது முக்கியமாகும். மக்கள் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக்கொள்வது சிறந்ததாகும்.

அதேநேரத்தில் எமது வைத்தியசாலையில் இறந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி பெறாதவர்களே. எனவே தடுப்பூசி பெறுவதன் மூலம் இறப்புகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...