யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை!
யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனாத் தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது – என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது முக்கியமாகும். மக்கள் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக்கொள்வது சிறந்ததாகும்.
அதேநேரத்தில் எமது வைத்தியசாலையில் இறந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி பெறாதவர்களே. எனவே தடுப்பூசி பெறுவதன் மூலம் இறப்புகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
Leave a comment