ja.te .ho
செய்திகள்இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை!

Share

யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை!

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனாத் தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது – என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது முக்கியமாகும். மக்கள் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக்கொள்வது சிறந்ததாகும்.

அதேநேரத்தில் எமது வைத்தியசாலையில் இறந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி பெறாதவர்களே. எனவே தடுப்பூசி பெறுவதன் மூலம் இறப்புகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...