மாங்குளத்தில் சோகம்: குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி; 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

IMG 20211210 WA0045

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பகுதியில் இன்று (27) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குளவிக்கொட்டுத் தாக்குதலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் திடீரெனக் கலைந்த குளவிகள் அங்கிருந்தவர்களைத் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மூன்று பாடசாலை மாணவர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் குளவிக்கூடுகள் கலைந்ததற்கான காரணம் குறித்து மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version