26 69806d6b7f392
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மயிலிட்டியில் சோகம்: இராணுவ வாகனம் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

Share

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் இன்று (02) திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் இராணுவ வாகனம் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டி வீதியில் முதியவர் தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, அதே திசையில் வந்த இராணுவ வாகனம் அவர் மீது மோதியுள்ளது.

இக்கோர விபத்தில் முதியவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இராணுவத் தரப்புடன் இணைந்து இராணுவ பொலிஸாரும் (Military Police) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான இராணுவ வாகனத்தின் சாரதியிடம் மேலதிக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...